vasanth

vasanth
தாய் நாடு நம் தமிழ் நாடு


என்ன சோதனை இது
எங்கள் நாட்டுக்கா சோதனை?
எம் நாட்டு மக்கள் எத்தனை வழிகளை சுமந்தார்கள்
ஏத்தனை உயிர்களை கொடுத்தார்கள்.
எல்லாமே வீண்தானா?
இல்லை கல்லறைகளுக்குள் தமிழனின் கனவுகள் கருக்கொண்டு கிடக்கின்றன!
சிந்திய குருதியின் சூடு தணியாமல் கிடக்கின்றது.
மனங்களில் மாறாத வடுக்கள் கிடக்கிறது.
நாம் செய்த வேள்வி தியாக வேள்விதான் முடிவதுக்கு மாதங்கள் ஆகலாம் வருடங்களும் ஆகலாம்
ஆனால் தமிழன் செய்த வேள்வி என்றும்
வீனாவதில்லை அதை சரித்திரம் சொல்கிறது.
இது ஆடி மாதம் கண்ட கனவுகள் பலிக்கும் மாதம்
கல்லறைகள் பூ பூக்கும் மாதம்
களமாடி வெல்லும் காலம்.
கட்டுகதைகளையும் கற்பனைகளையும் எண்ணி
காலம் கழிக்காதே.
யாழ்ப்பாணம் என்ன கொழும்பையும் சேர்த்து பிடிப்போம்.
புலியின் குணம் அறிந்தவனுக்கு புதிர் புரியும்.
நீ ரோஜாப்பூ எடுத்து வா க‌ல்லறைக‌ளுக்குள் துயிலும் மாவீரர்களின் காலடியில் வைத்து போ.
இன‌ம் வாழ இவ‌ர் செய்தார் தியாகம்
இவ‌ர் இன்னும் வாழ நாம் செய்வோம் தியாகம்.
உறவுக‌ளுக்காய் உயிர் கொடுத்த‌ மாவீரர்களே
உங்கள் உயிர் விலைக்கு இங்கு எது ஈடாகும்?
நீ ரோஜாப்பூ எடுத்துவா க‌ல்ல‌றைக‌ளுக்குள் துயிலும் மாவீரர்க‌ளின் காலடியில் வைத்துபோ.
த‌மிழின‌ம் விடியட்டும்
.




பொ.வ‌சந்த்

# Posté le lundi 06 juillet 2009 12:49

Modifié le lundi 06 juillet 2009 13:02

vasanth

vasanth



I love babe
I like babe

# Posté le mercredi 25 mars 2009 14:54

Modifié le samedi 28 mars 2009 18:56

காத‌லி

காத‌லி
பெண்ணே

நிலாப்பெண்ணே ஏன்று கவிஞர்கள்
சொல்வதுண்டு.
உன்னை நேரில் பார்த்தேன் சந்தித்த‌
நாளன்று.
மீன்களும் பார்த்து ஏங்கும் கண்கள்.
ஜப்புரோ பென்சில் கூட தீட்ட‌
ஆச்சரியப்படும் பொருள்.
மூக்குத்தி கூட ஏங்குதடி உன்
மூக்கைப்பார்த்து.
பலா சுளையைப்போல் உன் உதடு அதுக்குள்
இரத்தினகற்கள் போல பற்கள்.
சங்கு களுத்து, தாழம் போடும் ஜடை
பிரமனையே பித்தனாக்குதடி உன்
பெண்ணழகு.
நடக்க நடக்க வழுக்குறதாம் எறும்புக்கு என்ன
தொடையா அல்லது தொலைதூர பயனமா என்று
எறும்பே சொல்லிக்கேட்குதடி!
சின்ன கைகள் அதில் குழந்தையின் விரல்கள்,
குட்டிக்கால்கள் அதில் பூனை ரோமன்கள்
பஞ்ச பாதங்கள் அதில் பிஞ்சு விரல்கள்.
அடிப்பெண்ணே உன் அழகையெ பிரமன் எத்தனை கோடிகளுக்குப் பின் படைத்தானோ தெரியவில்லை!
அதனால்தானடி நீ மறுத்தும் கூட உன்னையே
சுத்தி சுத்தி வந்து மன்டியிட்டு ரசிக்கிரேன்
உனக்கு தெரியலையா?




பொ.வசந்த்

# Posté le dimanche 15 mars 2009 18:44

VASANTH

VASANTH
பிரியமானவளே


பிரியமானவளே
உன் சோதனைகளும் வேதனைகளும் நான் அறிவேன்
நீ போகும் பாதையெல்லாம்
கல்லும் முள்ளுமாக இருக்கிறது அதையும் நான் அறிவேன்
நீ நடக்கும் பாதையெல்லாம்
உன் பாதங்களுக்கு பூக்களைப்போல நான் இருப்பேன்
என் காதலி ஆனால்.
உன் கண்களை வைத்து ஓவியம் வரைவேன் அதை நான் ரசிப்பதற்காக.
என் உயிரை விட்டு நிலா வாங்குவேன் நீ படிப்பதற்காக.
நீ களைப்பாறுவதற்காக இதயத்தை விட்டு தென்றல் வாங்குவேன் நீ சுவாசிப்பதற்காக
நீ மட்டும் என்னவள் ஆகிவிட்டால்.


p.vasanth

# Posté le dimanche 08 mars 2009 08:45

Modifié le dimanche 08 mars 2009 09:02

kaadal

kaadal
காதல்

தாழம் பூ மலர்வதுக்கு திகதி இருக்கிறது
மல்லிகைப் பூவுக்கும் கூட ஜாதி இருக்கிறது
ஆனால் காதல் பூ இருக்கிறதே
அது மலர்வதற்கு திகதியும் பார்ப்பதில்லை
ஜாதியும் பார்ப்பதில்லை
இதயத்தில் ஆரம்பித்து கண்களீல் முடிந்தால்
அது கண்ணீர்
கண்களீல் ஆரம்பித்து இதயத்தில் முடிந்தால்
அது காதல்
காதல் ஆணேயும் பெண்ணேயும் பார்த்துதே தவிர‌
அந்தஸ்து வேதம் பார்ப்பதில்லை காதல்
காதல் நதிக்கு யாரும் கரை கட்டுவதில்லை
அது தன் கரையை தானே இட்டுகொள்கிறது.
காலகாலமாக ஓடிக்கொண்டிருக்கும் காதல்
வெள்ளத்தில் இன்னும் இரண்டு ஓடன்கள்
.


p.வசந்த்

# Posté le jeudi 05 février 2009 15:41